×

தமிழகத்தில் 5 எஸ்பிக்கள் மாற்றம்

சென்னை: 5 எஸ்பிக்கள், ஒரு கூடுதல் எஸ்பி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவு:  கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் மாதவன், சிபிசிஐடி சைபர் கிரைம் எஸ்பியாகவும், அந்தப் பதவியில் இருந்த அசோக்குமார், கோவை போக்குவரத்து துணை கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த மதிவாணன், கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், மதுரை 6வது பட்டாலியன் எஸ்பி புக்யா சினேகா பிரியா, சிவில் சப்ளை சிஐடி மதுரை மண்டல எஸ்பியாகவும், திருப்பூர் நகர தலைமையிட துணை கமிஷனர் பாஸ்கரன், மதுரை 6வது பட்டாலியன் எஸ்பியாகவும், தேனி உத்தமபாளையம் கூடுதல் எஸ்பி ஸ்ரேயா குப்தா, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உதவி எஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பயிற்சி முடித்து வந்துள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் அய்மன் ஜமால், சத்தியமங்கலம் உதவி எஸ்பியாகவும், பிரிந்தா, பொள்ளாச்சி உதவி எஸ்பியாகவும், யாதவ் கிரீஸ் அசோக், அரக்கோணம் உதவி எஸ்பியாகவும், மதுகுமாரி, உத்தமபாளையம் உதவி எஸ்பியாகவும், விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் உதவி எஸ்பியாகவும், பல்வீர் சிங், திருநெல்வேலி  அம்பாசமுத்திரம் உதவி எஸ்பியாகவும், கரட் கருண் உத்தவ் ராவ் அருப்புக்கோட்டை உதவி எஸ்பியாகவும், ஸ்டாலின்,  காரைக்குடி உதவி எஸ்பியாகவும், ரகுபதி சிதம்பரம் உதவி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu , 5 SPs changed in Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...