சென்னை: வாடகை தாய் விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை மீறி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன், சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், வாடகை தாய் ஆகியோரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.