திருச்சி: காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் 1,10,000 கன அடிக்கு மேல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.