×

மேலூர் அருகே பரபரப்பு: வங்கி மேலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மேலூர்: மேலூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில், பெட்ரோல் குண்டு வீசியதில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டியை சேர்ந்தவர் வடிவேலன் (40). தனியார் வங்கி மேலாளர். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த போஸ் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக பிரச்னை இருந்து வந்தது. இதனால், மதுரை சம்பக்குளத்தில், தனது குழந்தைகளுடன் வடிவேலன் குடியிருந்து வருகிறார். அரிட்டாபட்டியில் உள்ள வீட்டில், அவரது சகோதரி குடியிருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வடிவேலன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றது. இதில், வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த கட்டில் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதுகுறித்து வடிவேலன் அளித்த புகாரின்பேரில், எஸ்ஐ ஜெயம்பாண்டியன் வழக்கு பதிந்து முன் விரோதத்தால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரித்து வருகிறார்.

Tags : Pandemonium ,Melur , Pandemonium near Melur: Petrol bomb hurled at bank manager's house
× RELATED வேட்பாளர் முன்னிலையில் அதிமுகவினர்...