செய்முறை:
கெட்டியான அவலை லேசான சுடுநீரில் இரண்டு மணி நேரம் ஊற வைத்தால் அவல் நன்றாக ஊறி விடும். வெல்லத்தை தட்டி ஒரு வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அதில் போட்டு இளம் பாகாக காய்ச்சி அதில் ஊறிய அவலைப் போட்டு நன்றாகக் கிளறி ஏலப்பொடி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், நெய் சேர்த்து நன்றாகக் கிளறி கேசரி பதம் வந்ததும் கீழே இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி தேவையானால் துண்டுகள் போடலாம். இல்லையென்றால் அப்படியே பரிமாறலாம்.