×

ஆற்காடு அருகே ₹40 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்-கடை உரிமையாளர் கைது

ஆற்காடு :  ஆற்காடு அருகே ₹40 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை போலீசார் நேற்று அதிரடியாக பறிமுதல் செய்து கடை உரிமையாளரை கைது செய்தனர்.
 ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள ஆனைமல்லூரில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக திமிரி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத், தனிப்பிரிவு ஏட்டு பாஸ்கர், ஏட்டு சிலம்பரசன் ஆகியோர் கொண்ட தனிப்படை குழுவினர் அங்கு சென்று சோதனையிட்டனர்.  

அப்போது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 4 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ₹40 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து ஆனைமல்லூரைச் சேர்ந்த கடை உரிமையாளர் கார்த்தி (40) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



Tags : Gutka ,Arcot , Artgad: The police seized banned Gutka packets worth ₹40,000 near Artgad yesterday and arrested the shop owner.
× RELATED குட்கா விற்ற வாலிபர் கைது