×

அரியானாவில் மசூதிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பல்: தொழுகை நடத்தியவர்கள் மீது தாக்குதல்..!!

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் மசூதிக்குள் நுழைந்த கும்பல் ஒன்று அங்கு தொழுகை நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குருகிராமில் உள்ள போராகிளைன் என்ற கிராமத்தில் வீடு ஒன்றின் வளாகத்தில் மசூதி இருக்கிறது. கடந்த புதன்கிழமையன்று மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது 50க்கும் மேற்பட்டவர்கள் திடீரென்று உள்ளே புகுந்தனர். அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்த கும்பல், பலரை தாக்கி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

பிறகு அங்கிருந்து சென்றுவிட்ட கும்பல், இரவு தொழுகையின் போது மீண்டும் அங்கு வந்து பெண்கள் உள்ளிட்ட பலரை தாக்கியதாகவும், தொழுகை கூடத்திற்கு பூட்டு போட்டுவிட்டு சென்றதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து இஸ்லாமிய குடும்பங்கள் வெளியேற வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்திருக்கும் குருகிராம் நகர காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், காவல் அதிகாரிகள் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.


Tags : Ariana , Ariana, mosque, violence, prayer, attack
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...