சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (24). சமையல்காரரான இவர், மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் உள்ள கேன்டீனில் வேலை செய்து வருகிறார். இவருடன் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த விஷ்ணு (27), நித்தின் (30), கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சுனில் சந்திரன் (26), ஆழ்வார்பேட்டையை சேர்ந்த காளிமுத்து (57) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், விக்னேஷ் தனது நண்பர் ஜெயசூர்யா (24) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனை கேன்டீனில் மது அருந்தியுள்ளார்.
இதை விஷ்ணு, நித்தின், சுனில் சந்திரன், காளிமுத்து ஆகியோர் கண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் விக்னேஷ் கேன்டீனில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் 4 பேரையும் சரமாரியாக கத்தியால் குத்தினார். தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார், படுகாயடைந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், குடிபோதையில் கத்தியால் குத்திய சமையல்காரர் விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.