×

ஜி.எஸ்.டி. இணை கமிஷனர் மனைவி தற்கொலை

சென்னை: ஜி.எஸ்.டி. இணை கமிஷனரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெசன்ட் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இணை கமிஷனராக பணிபுரிபவர் தினகரன் (43). இவரது மனைவி மோனிகா (36). இவர்களுக்கு2 மகன்கள் உள்ளனர். பெசன்ட் நகரில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கான  குடியிருப்பில் தினகரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த மோனிகா,  மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மகன்கள், வீட்டில் தாய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தந்தைக்கு தெரிவித்தனர். தகவலறிந்து, சாஸ்திரி நகர் போலீசார் வந்து மோனிகாவின் சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


Tags : GST ,Commissioner , GST Joint Commissioner's wife committed suicide
× RELATED திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து...