உத்தர பிரதேசம்: வாரணாசியில் ஜெயபிரகாஷ் நகர் காலனியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி பசுபதிநாத் சிங் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மதுக்கடையில் இளைஞர்களுடன் ஏற்பட்ட தகராறில் பசுபதிநாத் சிங் மகன் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பா.ஜ.க. நிர்வாகி பசுபதிநாத் சிங் உயிரிழந்தார். மகன் ராஜன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.