பழனி: பழனியில் தொழில் போட்டி காரணமாக தையல் கடைக்காரரை கொலை செய்த வழக்கில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குறைவான கட்டணத்தில் துணிகளை தைத்து வந்த ஜெயந்த் சமந்தா(34) என்பவருக்கும் தர்மராஜ் என்பவருக்கும் தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் குறைந்ததால் கோபமடைந்த தர்மராஜ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ஜெயந்த் சமந்தாவை கொலை செய்துள்ளனர்.