விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன், சாலையோரத்தில் இருந்த லாரி மீது உரசியதில் தவறி விழுந்து படுகாயமடைந்தான். காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். படியில் பயணம்., நொடியில் மரணம் என்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.