×

20 ஆண்டுக்குப் பிறகு முதல்முறை ஜப்பான் ஏவிய ராக்கெட் தோல்வி: 8 செயற்கைகோளுடன் கடலில் விழுந்தது

டோக்கியோ: ஜப்பானில் இருந்து 8 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற எப்சிலன்-6 ராக்கெட் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள உச்சினூரா விண்வெளி மையத்திலிருந்து எப்சிலன்-6 ராக்கெட் மூலம் 8 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது ஏவப்பட்ட 7 நிமிடங்களில் நிறுத்தப்பட்டு திட்டம் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. எப்சிலன்-6 ராக்கெட் பூமியைச் சுற்றி வர சரியான நிலையில் இல்லாத காரணத்தால் திட்டம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் விண்வெளி கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவர் ஹிரோஷி யமகாவா கூறுகையில், “முதல் கட்டமாக ராக்கெட் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ம் தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படும். ராக்கெட் திட்டமிட்டபடி பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த சரியான நிலையில் இல்லாததால், ராக்கெட் தானாக அழித்து கொள்ளும் படி சிக்னல் கொடுக்கப்பட்டது,’’ என்று தெரிவித்தார். ராக்கெட் மற்றும் அதன் பாகங்கள் பிலிப்பைன்ஸின் கிழக்கே கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஜப்பானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த முதல் ராக்கெட் தோல்வி இதுவாகும்.

Tags : Japan , Japan's first rocket failure in 20 years: 8 satellites fall into ocean
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!