டெல்லி: 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் அரசுக்கு அதிகாரம் உள்ளதா? உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக விரிவான பிரமானபத்திரம் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பணமதிப்பிழப்பு செய்ய பின்பற்றிய வழிமுறைகள் சரியானதா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.