×

ஆசிரியர் நியமன முறைகேடு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தொடக்க ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பாக, தொடக்கக் கல்வி வாரியத்தின் தலைவராக இருந்த பலாஷிபாரா எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யாவை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்தது. அதன்படி, நேற்று முன்தினம் மதியம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் எந்த கேள்விக்கும் முறையாக பதிலளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதனால், நேற்று அதிகாலை அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கை சிபிஐயும் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை அடுத்தடுத்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Trinamool Congress ,MLA , Trinamool Congress MLA arrested for teacher appointment scam
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...