×

டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கோவை, பெரம்பலூரில் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்தது. மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என்று யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் அமல்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து, இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது குறித்து வழக்கறிஞர்கள் ஆலோசனைகள் வழங்கினர். அதற்கு பதிலளித்து டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், முதலில் ஒரு மாவட்டத்தில் இத்திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்தி, அதன் முடிவுகளைப் பார்த்து, பிற மாவட்டங்களில் அமல்படுத்துவதாக தெரிவித்தார்.இதையடுத்து, கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவம்பர் 15 முதல் இரு மாதங்களுக்கு அமல்படுத்தி அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Tasmac ,Coimbatore, ,Perambalur , Tasmac to implement empty liquor bottle recall scheme in Coimbatore, Perambalur districts: Court order
× RELATED தேர்தலுக்காக குவியும் பாண்டிச்சேரி...