சென்னை: சென்னை, மதுரை, கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகளும், இடதுசாரி கட்சிகளும் இணைந்து நடத்திய மனித சங்கிலியில் சங்கப்பிரிவார் அமைப்புகளுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை என்று முழக்கமிட்டனர்.