கடலூர்: விருத்தாசலம் அருகே கோபாலபுரத்தில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 16 மாணவர்கள் காயம் அடைந்தனர். தனியார் பள்ளி வாகனங்கள் போட்டி போட்டு ஓட்டி சென்றபோது ஒரு வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதி கவிழ்ந்தது. போட்டி போட்டு ஓட்டிய ஓட்டுனர்களை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.