புதுடெல்லி: டெல்லியில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் நேற்று தொண்டர்களிடையே பேசியதாவது: பாஜ வகுப்பு வாதத்தை உருவாக்குகிறது. சமூக நீதி மற்றும் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சியாகும்.
எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு முயற்சியின் விளைவாக தான் எனக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவற்றால் என்னை பயமுறுத்த முடியாது. பாஜ அரசு வேறோடு பிடுங்கி எறியப்படும். பாஜவிற்கு எதிரான ஒற்றிணையும் முயற்சியில் இணையாத கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’ என்றார்.