×

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருடன் சென்னையில் திருமணம் நடந்தது: சுயசரிதையில் சொப்னா பகீர் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான சொப்னா தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை எழுதி உள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில், அமீரக தூதரகத்தில் துணை தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்த சொப்னா முக்கிய புள்ளியாக கருதப்படுகிறார். அவர் எழுதி உள்ள சுயசரிதை மூலம் கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதையில் கூறியிருப்பதாவது: கேரளாவில் மீண்டும் பினராய் விஜயன் அரசு வர வேண்டும் என்பதற்காகத் தான் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அரசுக்கோ, அரசு சார்ந்தவர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று சிறையில் இருந்தபடி வெளியிட்ட ஆடியோவில் தெரிவித்திருந்தேன்.மீண்டும் இடது முன்னணி ஆட்சி வந்தால் தான் வழக்கிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறி என்னை நம்ப வைத்து ஆடியோவை பதிவு செய்தார்கள். ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சென்னையில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் எனது கழுத்தில் தாலி கட்டினார். அப்போது ஒருபோதும் என்னை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். 2 பேரும் கைதான பிறகு முதன்முதலாக என்ஐஏ அலுவலகத்தில் சிவசங்கரை பார்த்த போது எனது கழுத்தில் அவர் கட்டிய தாலி இருந்தது. இவ்வாறு புத்தகத்தில் சொப்னா கூறி உள்ளார்.

* உல்லாசத்துக்கு அழைத்தார்
சுயசரிதையில் சொப்னா, ‘முன்னாள் அமைச்சரும், கேரள சட்டசபையில் முக்கிய நபராக இருந்தவருமான ஒருவர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு வருமாறு பலமுறை அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. இது தொடர்பாக அவர் எனக்கு பலமுறை அனுப்பிய வாட்சப் தகவல்கள் இப்போதும் என்னிடம் பத்திரமாக உள்ளன. அதை நான் விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கனவே கொடுத்து விட்டேன்’ என எழுதியுள்ளார்.

Tags : Sivashankar ,Chennai ,Sobna Bhagir , Married to IAS Officer Sivashankar in Chennai: Sobna Bhagir in Biography
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது