×

பொய்யான புகாரில், என்மீது வழக்குப்பதிவு மனைவி, குழந்தை பாதித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: நடிகர் அர்னவ் பரபரப்பு பேட்டி

சென்னை: என் மீது பொய்யான புகாரின் அடிப்படையில், மகளிர் போலீசார்  தவறாக  வழக்குப்பதிவு செய்து விட்டனர். என் மனைவி, குழந்தைக்கு பாதிப்பு வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என, நடிகர் அர்னவ் கூறியுள்ளார். சின்னத்திரை நடிகரான  அர்னவ் தன்னுடன் கதாநாயகியாக நடித்த திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையே ஏற்பட்டு வரும் தகராறு காரணமாக ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வருகின்றனர். கர்ப்பிணியாக உள்ள நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார்  அர்னவ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் இந்த நிலையில் நேற்று திருவேற்காட்டில் உள்ள தனது இல்லத்தில் அர்னவ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

‘‘என் மனைவி திவ்யா நான் அடித்ததாக கூறி புகார் அளித்தார். என் விரல் கூட அவர் மீது படவில்லை. அவர் அளித்த பொய்யான புகாரில் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனக்கு என்னுடைய மனைவி, குழந்தையை மீட்டு தர வேண்டும். குடும்ப சண்டையை அவருடன் இருப்பவர்கள் இப்படி செய்து விட்டனர். ஈஸ்வர் தரப்பில் இருந்து குடும்ப பிரச்னையை நடத்திய வக்கீல் தான் திவ்யாவுடன் இருந்து நடத்தி வருகின்றார். இதுவெல்லாம் திவ்யாவின் நண்பர்களான பிரியா, திவ்யா, கருணா எல்லோருக்கும் தெரியும். இதுவரை திவ்யா போலீஸ் விசாரணைக்கு செல்லாமல் இருக்கிறார். என் மனைவியுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும். பிறக்க போகிற குழந்தையுடன் நான் இருக்க வேண்டும். என் மனைவிக்கு எந்த பாதிப்பும் வர கூடாது. என் குழந்தைக்கு ஏதாவது ஆனால் ஈஸ்வர், திவ்யா ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன்’’ என்று தெரிவித்தார்.

Tags : Arnav Stiral , In a false complaint, I will take legal action if my wife and child are affected by the case filed against me: Actor Arnav in a sensational interview
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...