×

தேர்தலை நடத்திய முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி

திமுக முன்னாள் அமைச்சர், திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினராக இருப்பவர் ஆற்காடு வீராசாமி. இவர் வயது முதிர்வு காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார்.இந்த நிலையில், சக்கர நாற்காலியில் அமர்ந்து அவர் பொதுக்குழுவில் பங்கேற்றார். அவர் தான் தேர்தலை நடத்தும் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தான் தேர்தல் ஆணையராக இருந்து தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Former minister ,Arkadu Veerasamy , Elections, Former Minister, Arkadu Veerasamy
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...