சென்னை: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்பி மைத்ரேயனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுக்குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான மைத்ரேயன் கட்சியின் அடிப்படை பொறுப்புகளிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.