சென்னை: திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு திமுக பொதுக்குழுவில் இன்று அறிவிக்கப்பட்டது. தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, பொது செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் ஒரு ஜோடி ‘மான்ட்பிளாங்க்’ பேனாவை பரிசாக வழங்கினார்.
இதில் தான் அவர் கையெழுத்திட வேண்டும். இதில் தான் அவர் வரலாற்று சிறப்பு மிக்க செய்திகளை வெளியிட வேண்டும் என்று ‘மான்ட்பிளாங்க்’ பேனாவை அவர் பரிசாக அளித்தார். தொடர்ந்து துரைமுருகன் மு.க.ஸ்டாலின் சட்டை பையில் இருந்த பேனாவை எடுத்து விட்டு, புதிய பேனாவை அதில் வைத்தார். இதை பார்த்து ஸ்டாலின் உள்பட அனைவரும் புன்னகைத்தனர்.