×

சின்னத்திரை நடிகையை தாக்கிய கணவர் அர்னவ் மீது போலீஸ் வழக்கு பதிவு

சென்னை: சின்னத்திரை  நடிகை திவ்யாவை தாக்கிய விவகாரத்தில் கணவர் அர்னவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவேற்காடு, கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த திவ்யா தர் (35), இவரது கணவர் அர்னவ் (எ) நைனா முகமது (33). கடந்த 4ம் தேதி இரவு, இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் அர்ணவ் அவரை தாக்கியுள்ளார். கர்ப்பமான நிலையில் அவரை தாக்கியதால் காயமடைந்தவர், தனது நண்பர்கள் மூலமாக கே.எம்.சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவனையில் அளித்த புகாரின் அடிப்படையில் போரூர் எஸ்.ஆர்.எம்.சி மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

அதே நேரத்தில் ஆவடி ஆணையரகத்தில் அளிக்கப்பட்ட புகாரும்  போரூர் எஸ்.ஆர்.எம்.சி மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தது. இருவரின் புகாரையும் ஏற்றுக்கொண்டு முதல் விசாரணை செய்து அர்னவ் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்தும், விசாரணை நடந்து வருகிறது. இதில், எந்த நேரத்திலும் அர்னவ் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags : Arnav , Police registered case against husband Arnav for assaulting small screen actress
× RELATED சின்னத்திரை நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமீன்