ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து படகில் வந்தபோது தனுஷ்கோடி நான்காம் மணல் திட்டில் படகோட்டிகளால் இறக்கி விடப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்ளிட்ட 5 பேரை ராமேஸ்வரம் மரைன் போலீசார் மீட்டனர்.
இலங்கை கடற்படையினர் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், தங்களுடன் வந்தவர் கடலில் குதித்து விட்டதாகவும் தெரிவித்தனர். கடலில் குதித்த ஹசான்கான்(24) நேற்று மண்டபம் அகதிகள் முகாமிற்கு வந்து சேர்ந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.