×

ராஜபாளையம் அருகே மக்கள் பாராட்டு ஆட்டோ ஓட்டி அசத்தும் பெண்

ராஜபாளையம் : வேலைக்காக பிறரை நம்பி இராமல், சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டும் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த பெண், மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கோவிலூரைச் சேர்ந்தவர் காசி பழனியம்மாள். இவரது மகள் மதி. இவருக்கு திருமணம் முடிந்து 6ம் வகுப்பு படிக்கும் பையன் உள்ளான்.

மதி 10 ஆண்டுகளுக்கு முன் ஓட்டுனர் பயிற்சி பெற்று, கோவிலூர் கிராமத்தில் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். ஆண்கள் மட்டுமே ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர் தொழிலில் இவர் சாதிப்பது, இப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து மதியிடம் கேட்டபோது, ‘‘நான் டிப்ளமோ நர்சிங் படித்துள்ளேன். நர்சிங் பணிக்கு நகர்ப்புறத்திற்கு செல்ல வேண்டும்.

ஆகவே, சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறேன். எங்கள் ஊரில் உள்ள ஆட்டோ நலச்சங்கத்தில் 25க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. இதில் நான் மட்டுமே பெண் ஆட்டோ ஓட்டுனர். 8ம் வகுப்பு படிக்கும்போது, சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்ட விரும்பினேன்.

 பெண் ஆட்டோ ஓட்டுனராக இருப்பதால், எனது ஆட்டோவில் பெண்கள் தனியாகவும், குடும்பத்துடன் விரும்பி பயணம் செய்கின்றனர். இரவு நேரங்களில் அவசர வேலைக்காக பயணிகள் அழைக்கும்போது, எனது பெற்றோரை உதவிக்கு அழைத்துச் செல்வேன். ஆட்டோ ஓட்டுவதை பார்த்து பலரும் பாராட்டுகின்றனர். இது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

Tags : Rajapalayam , Rajapalayam, Auto, mathi, Auto Driver
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!