×

போலி பத்திர பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் சட்ட திருத்தத்தை எதிர்த்து பொதுநல வழக்கு: ஒன்றிய, தமிழக அரசுகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆரோக்கியதாஸ் என்ற வழக்கறிஞர் போலி பத்திர பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை எதிர்த்து பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், என்.மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு குறித்து 4 வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Tags : Union ,Tamil Nadu Govts ,IC Court , Public Interest Litigation Against Power to Cancel Fake Deed Registration Act Amendment: Union, Tamil Nadu Govts Respond to IC Court Order
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை