மதுரை: எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றாக அறிவித்த இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்றை திறந்து வைத்துள்ளனர். மதுரையில் செங்கல் மட்டுமே உள்ளது. பிரதமரின் பெயரில் உள்ள திட்டங்களில் மாநில அரசு நிதியின் பங்களிப்பே அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.