ராமேஸ்வரம்: மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.13 லட்சம் மதிப்புள்ள 1,100 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டனர். இலங்கைக்கு கடத்த வேதாளை கடற்கரையில் பதுக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டனர். கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.