மதுரை: போலி பட்டா வழங்கிய வழக்கில் புரோக்கரின் முன்ஜாமீன் ரத்தானது. தேனியை சேர்ந்த உமாமகேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வைரம் என்ற ராஜா கேட்டுக் கொண்டதால் திம்மராசநாயக்கனூரில் சொத்து வாங்கினேன். அந்த நிலத்துக்கு போலி பட்டா வழங்கினர். துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் துணையுடன் போலி பட்டா தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புரோக்கர் வைரம் என்ற ராஜா ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் 300 பேரிடம் பணம் வசூலித்து 300 போலி பட்டாக்கள் வழங்கியுள்ளார். தற்போது வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.