சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வீட்டில் ஓய்வில் இருந்துவந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று மாலை 6.10 மணியளவில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை டீன் தேரணிராஜன் தலைமையில் மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.