கராச்சி: பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பெண் நீதிபதி ஒருவரையும் 2 போலீஸ் அதிகாரிகளையும் மிரட்டும் வகையில் பேசினார். இதுதொடர்பாக பெண் நீதிபதி அளித்த புகாரின் பேரில் இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.