ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் பதவி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தனது ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும், தானே முதல்வராக தொடர்வதாகவும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் விலகியதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து அசோக் கெலாட் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இவருக்கு பதிலாக இளம் தலைவரான சச்சின் பைலட்டை அந்த பதவிக்கு கொண்டு வர கட்சித் தலைமை விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.