×

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளதற்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்..!!

சென்னை: ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90 சதவீதமாக ஆக்கியுள்ளதற்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். வட்டி விகிதம் குறித்து கண்டனம் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வட்டி விகித உயர்வால் வீட்டுக்கடன், வங்கிக்கடன், இஎம்ஐ வட்டி விகிதம் உயரும். ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வால் சாதாரண உழைப்பாளிகளின் துயரம் அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு, வேலையின்மை என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் மக்கள் தவிப்பில் உள்ளனர். மக்களை பற்றி கவலை இல்லை, உணர்ச்சி தூண்டல் அரசியலே போதும் என்ற மிதிப்பில் மோடி ஆட்சி வெகுதூரம் சென்றுவிட்டது என்று குறிப்பிட்டார்.

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மேலும்  0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை அரை சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டார். வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதம் ஆனது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயர்கிறது. வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் வீடு, வாகன, தனி நபர் கடனுக்கான தவணைத் தொகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Reserve Bank ,Balakrishnan , Reserve Bank, Interest Rate, K. Balakrishnan
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு