கடலூர்: சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து ரூ.1 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூரை சேர்ந்த வாசு என்பவரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்த மதுரையை சேர்ந்த பாண்டியனை கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்