அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.