டெல்லி: இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தமிழக மீனவர்கள் துயரம் அனுபவிப்பார்கள், மீனவர்களின் துயர் துடைக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.