×

முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: பெகாட்ரான் தொழிற்சாலையை தொடங்கி வைத்து முதலமைச்சர் உரை

செங்கல்பட்டு: முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் ஸ்மார்ட் போன் தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பெகாட்ரான் நிறுவனம் பல நாடுகளில் தொழிற்சாலைகளை தொடங்கி ஏராளமானவர்களுக்கு வேலை வழங்கி வருகிறது. உலக புகழ்பெற்ற தைவான் நிறுவனம் தமிழ்நாட்டில் வந்து செல்போன் உற்பத்தியை தொடங்குவது பெருமை அளிக்கிறது. பெகாட்ரான் நிறுவனம் ரூ.1200 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை தொடங்கி உள்ளது என்றார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Pegatron factory , Investment, Investors, Pegatron Factory, Chief Minister
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்