×

இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது: ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்:  புரட்டாசி மாதம் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 150க்கும் குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றன. இரவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்துள்ளதாக கூறி விரட்டியடித்தனர்.

மேலும் அப்பகுதிக்கு மீனவர்கள் வந்து விடாதபடி, இரவு முழுவதும் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், வேறு பகுதிகளுக்கு சென்று இரவு முழுவதும் மீன் பிடித்து, நேற்று காலை குறைவான மீன்களுடன் கரை திரும்பினர்.

Tags : Sri Lankan Navy ,Rameswaram , Sri Lankan Navy rampage continues: Rameswaram fishermen chased again
× RELATED இலங்கை கடற்படையை கண்டித்து...