சென்னை : அரசின் கொள்கை, காகிதங்களில் மட்டும் இல்லாமல் செயல் வடிவம் பெற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்ற செய்தித்தாள் நிறுவனத்துக்கு அனுமதி அளித்த உத்தரவை தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. மீறினால் சம்பந்தப்பட்ட துறை செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.