சென்னை: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை முடக்க நினைப்பது பகல் கனவாகவே முடியும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதிப்பதா? என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி முதல்முறையாக நடப்பது போல சில அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர் எனவும் வானதி குறிப்பிட்டார்.