சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நீதிமன்றம் அனுமதி தந்தது மிகப்பெரிய ஆச்சர்யம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால் நீதிமன்றம் பொறுப்பேற்குமா? என கேள்வி எழுப்பிய அவர், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என தெரிவித்துள்ளார்.