×

ரூட் தல என்று கூறி ரயிலில் கத்தியுடன் அட்டகாசம் மறுவாழ்வு மையத்தில் மாணவர் சேவை செய்ய வேண்டும்: நிபந்தனை ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்

சென்னை: ரூட் தல எனக்கூறி சக மாணவர்ளுடன் புறநகர் ரயில் பயணிகளை கத்தியைகாட்டி மிரட்டிய மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ‘மறுவாழ்வு மையத்தில் சேவை செய்யுமாறு’ நிபந்தனை விதித்துள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி வெங்கட்ரமணா என்ற மாணவன் ரூட் தல எனக் கூறிக்கொண்டு சக மாணவர்களுடன் புறநகர் ரயிலில் வருபவர்களிடம் கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக அவர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக் கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி மாணவனின் தந்தையை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் ஒரு சிறிய ஹோட்டலில் காசாளராகப் பணியாற்றி தனது மகனை சிரமத்துடன் படிக்க வைப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆறு வாரங்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னையில் உள்ள உடல் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான மித்ரா மறுவாழ்வு மையத்திற்குச் சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு பராமரிப்பதில் உதவ வேண்டும் என்ற நிபந்தனையோடு குட்டிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஒவ்வொரு வாரமும் அதற்கான அறிக்கையை விடுதி காப்பாளரிடம் மனுதாரர் சமர்ப்பிக்க வேண்டும். மாணவனுக்கு மனிதாபிமானத்தின் அர்த்தத்தை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது. மாணவனின் கல்வி கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : Atakasam Rehabilitation Center , Student to serve at Atakasam Rehabilitation Center with knife on train claiming to be Root Thala: ICourt grants conditional bail
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...