×

அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய பொதுக்குழு அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 9 காலை 9 மணிக்கு அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-ஆவது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 9-10-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்” நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Dizhagam General Secretary ,Thuraymurugan , DMK General Committee, General Secretary, Durai Murugan,
× RELATED பக்கத்து மாநிலம் என்பதை கர்நாடகம்...