சென்னை: ரூட் தல என்று கூறி புறநகர் ரயிலில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டிய பச்சையப்பன் கல்லூரி மாணவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறுவாழ்வு மையத்தில் சேவை செய்ய வேண்டும் என்று மாணவனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.