×

மீண்டும் அதிகரிக்கும் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,000க்கு விற்பனை..நகை பிரியர்கள் சோகம்..!!

சென்னை: தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் மீண்டும் உயர்வை  கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.4,625க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது. குறிப்பாக கடந்த வாரம் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை திடீர் சரிவை கண்டு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமின்றி இவ்வாரத்தின் முதல் 2 தினங்களில் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே  விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் தங்கம் விலை எதிர்பாராத விலையில் அதிரடி சரிவை கண்டது.

நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம், சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.36,880க்கும், கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,610க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளியின் விலை 67க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதாவது  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.37,000-க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.4,625-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டு வருவது இல்லத்தரசிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Gold, Savaran, Rs.120 increase
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...