×

அடையார் பகுதிகளில் 12 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு, இழப்பீட்டுத் தொகை ரூ.9.64 லட்சம் வசூல்

சென்னை: அடையார் பகுதிகளில் 12 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு, இழப்பீட்டுத் தொகை ரூ.9.64 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை/மையம், சென்னை/வடக்கு, சென்னை/தெற்கு, சென்னை/மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள், சென்னை தெற்கு-ஐஐ மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அடையார் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 12 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ரூ. 8,84,597/- (ரூபாய் எட்டு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐந்நூற்று தொண்ணுற்று ஏழு மட்டும்) இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.80,000/- (ரூபாய் எண்பதாயிரம் மட்டும்) செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/அமலாக்கம்/சென்னை கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

Tags : Achiyar , 12 power thefts detected in Adyar areas, compensation amount Rs.9.64 lakhs collected
× RELATED தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு...