×

மக்கள் ஆதரவுடன் வளரும் அமைப்புகளை அழிக்க சதி: ஒன்றிய அரசு மீது வைகோ கண்டனம்

சென்னை: மக்கள் ஆதரவு பெற்று, வளரும் அமைப்புகளை ஒன்றிய அரசு அழிக்க சதி செய்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புக்கள் மக்களாட்சி முறையில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்புகளாகும். மக்கள் ஆதரவுடன், வேரூன்றி வளர்ந்து வரும் இந்த அமைப்புக்களை இயங்கவிடாமல் தடுத்து, அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் காவிக் கும்பல் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்திக்கொண்டு வருகிறது.இந்தப் போக்கினை கண்டிக்கிறேன். அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

Tags : Vigo ,Union Govt. , Conspiracy to destroy institutions that develop with people's support: Vigo condemns Union Govt
× RELATED கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத்...