×

ஆசிரியர்களுக்கு பயிற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டையொட்டி, ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில்,180 அறிவியல் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியை, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கலைச்செல்வி தலைமை தாங்கி தொடங்கி  வைத்தார்.

இந்நிகழ்வை மாவட்ட செயலாளர் முனுசாமி,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாகீர் உசேன்,  மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பரமசிவம், மாவட்ட பொருளாளர் செல்லப்பாண்டி, மாவட்ட துணை தலைவர் ஜெயந்தி மற்றும் காஞ்சிபுரம் கிளை தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டனர்.

Tags : Training for teachers
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...